முக்கிய செய்தி
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரிவான புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என இன்று நாடாளுமன்ற மக்களவையில் விதி 377-ன் கீழ் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரிவான புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
இன்று நாடாளுமன்ற மக்களவையில் விதி 377 ன் கீழ் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி வழங்கிய உரை.
--
என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வறட்சியான பகுதி, வற்றாத நீர்நிலைகள் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த நீர் நிலைகளும் இல்லாத பகுதி, எனவே விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் எனது ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் உள்ள அனைத்து அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி, வைகை ஆற்று தண்ணீர் அனைத்து கண்மாய்களையும் சென்றடைவதற்கும், அதன் மூலம் விவசாயம் செழிப்பதற்கும் சிறப்பு திட்டத்தினை ஒன்றிய அரசு அறிவித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
காற்றாற்று வெள்ளம் வரக்கூடிய வரத்து கால்வாய்களில் மழைநீர் சேகரிப்பு ரீசார்ஜ் போர்வெல் உருவாக்கி நிலத்தடி நீரை உயர்த்துவதற்கும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களிலும், நகரங்களிலும், தெருக்களிலும் ரீசார்ஜ் போர்வெல் உருவாக்கி அதன் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தி குடிப்பதற்கு சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த சிறப்பு திட்டத்தினை ஒன்றிய அரசு அறிவித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்