முக்கிய செய்தி

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் வீட்டு வரி கூடுதலாக்கப்பட்டது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிவிப்பை மாற்றக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை.

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் வீட்டு வரி கூடுதலாக்கப்பட்டது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிவிப்பை மாற்றக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை.
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் வீட்டு வரி கூடுதலாக்கப்பட்டது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிவிப்பை மாற்றக் கோரி கோரிக்கை மனுக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தயார் செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக அய்யம்பேட்டை பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

கையெழுத்து வாங்கப்பட்ட 300 மனுக்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஜே.எம். அப்துல் காஸிம் ராஜாஜி, அய்யம்பேட்டை நகர தலைவர் பொதக்குடி பைசல், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பி.ஜே. அப்துல்லாஹ், நகர செயலாளர் சித்தராவுத்த உசேன், நகர பொருளாளர் தஞ்சை அய்யூப் கான் மற்றும் ஆவூர் ரஷீத் மற்றும் திமுக நிர்வாகிகள் மன்சூர், ஹலிலுர் ரஹ்மான் ஆகியோர் அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரிடம் 26.12.2022 வழங்கினர்.