முக்கிய செய்தி

இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும். நவாஸ்கனி எம்பி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும்.  நவாஸ்கனி எம்பி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும்.
 
நவாஸ்கனி எம்பி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
---
வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பொய்யாத்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வறட்சி இழப்பீட்டு நிதியினை வழங்க வேண்டும் என இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ்கனி எம்பி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்த கோரிக்கையில் குறிப்பிட்டு இருந்ததாவது, 
 
இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தினால் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
வைகை பாசன கண்மாய் தவிர மற்ற அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து மிக குறைவான காரணத்தினால் விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
 
மழையை நம்பியே சாகுபடி செய்த சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் கருகி இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.
 
எனவே இந்த ஆண்டினை வறட்சி ஆண்டாக அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உரிய வறட்சி நிவாரண தொகை இழப்பீட்டினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
மேலும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு விவசாயம் விளையாத நிலையில் காப்பீட்டுத் தொகை வருவதற்கு மிகுந்த கால தாமதம் ஆகுவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
எனவே பயிர் காப்பீட்டு தொகையை தாமதம் இன்றி விரைவாக வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ் கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.