முக்கிய செய்தி

சென்னையில் மார்ச் 10ந் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 வது ஆண்டு பவள விழா தேசிய மாநாடு இராஜபாளையத்தில் விருதுநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையம் பி.எம்.அப்துல் ஜப்பார் திண்டுக்கல் முகம்மது இல்யாஸ் பங்கேற்பு.

சென்னையில் மார்ச் 10ந் தேதி  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 வது ஆண்டு பவள விழா தேசிய மாநாடு இராஜபாளையத்தில் விருதுநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையம் பி.எம்.அப்துல் ஜப்பார் திண்டுக்கல் முகம்மது இல்யாஸ் பங்கேற்பு.
சென்னையில் மார்ச் 10ந் தேதி  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 வது ஆண்டு பவள விழா தேசிய மாநாடு இராஜபாளையத்தில் விருதுநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையம் பி.எம்.அப்துல் ஜப்பார் திண்டுக்கல் முகம்மது இல்யாஸ் பங்கேற்பு.

இராஜபாளையம் ஜனவரி 5
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 வது ஆண்டு பவள விழா தேசிய மாநாடு சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஎ. மைதானத்தில் 10.3.2023 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறுகிறது 

இந்த மாநாடு சம்மந்தமாக விருதுநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை  கூட்டம் இராஜபாளையம் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் எச்.விவாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

நகரத் தலைவர் எ. சையது இப்ராகீம் ஆலிம் நகரச்செயலாளர் எம் காதர் மைதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 

எ.சையது அலி பாதுஷா ஆலிம் கிரா அத் ஓதினார் 

சத்திரப்பட்டி கிளைத் தலைவர் அப்துல் லத்தீப் வரவேற்றார் 

எஸ்.கே.ஹஸனுதீன் ஆலிம் முகம்மது அபுபக்கர் ஆலிம் என் முகம்மது       ஹீசைன் ஆலிம் ஆகியோர் கருத்துரை வழங்கினர் 

தகவல் தொழில் நுட்ப அணி மாநில இணை ஒருங்கினைப்பாளர் மேலப்பாளையம் பி.எம் அப்துல் ஜப்பார் முஸ்லிம் யூத் லீக் தேசிய செயலாளர் திண்டுக்கல் முகம்மது இல்யாஸ் ஆகியோர் ஆலோசனை வழங்கி உரையாற்றினர்.

விருதுநகர் தெற்கு மாவட்டத்தில் இருந்து அதிகமான நபர்களை மாநாட்டிற்கு அழைத்துச் செல்வது என்றும்  ஒவ்வொரு வீடு வீடாக சென்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து மாநாட்டு அழைப்பு கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

கூட்டத்தில் இராமநாதபுரம் நகரத் தலைவர் முகம்மது காசீம் திண்டுக்கல் மாவட்ட யூத் லீக் தலைவர் முகம்மது ரிபாயி மணிச்சுடர் புளியங்குடி சாகுல் கமீது சத்திரப்பட்டி அப்துல் ரஹ்மான் ஶ்ரீவில்லிபுத்தூர் ஷாஜஹான் இராஜபாளையம் அசன் கனி பக்கிர் மஸ்தான் மரியம் பாட்சா கலிபுல்லாஹ் உட்பட பலர் பங்கேற்றனர் முடிவில் நகர பொருளாளர் எம் தஸ்தகீர் நன்றி கூறினார்