முக்கிய செய்தி

இராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் திட்டத்துறையின் மூலம் 598 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.47.33 கோடி சுழல் நிதிக்கான கடன் திட்ட ஆணைகள் வழங்கி, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 44 கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்வி

இராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் திட்டத்துறையின் மூலம் 598 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.47.33 கோடி சுழல் நிதிக்கான கடன் திட்ட ஆணைகள் வழங்கி, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 44 கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்வி
இராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் திட்டத்துறையின் மூலம் 598 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.47.33 கோடி சுழல் நிதிக்கான கடன் திட்ட ஆணைகள் வழங்கி, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 44 கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்வில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் மற்றும் திமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு காதர் பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்பி பங்கேற்றார். இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங்,இ.ஆ.ப.,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.இராம.கருமாணிக்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு திசைவீரன், துணைத் தலைவர் திரு வேலுச்சாமி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார் , மாவட்ட தலைவர் வருசை முஹம்மது ,ஆற்றங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நூருல் அஃபான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.