- Admin
- 16 Aug, 2024
- Views: 11
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது தனது உயிரை பணயம் வைத்து மருத்துவ பணி செய்தமைக்காக தமிழக முதலமைச்சரால் வீர தீர செயலுக்கான 'கல்பனா சாவ்லா விருது' பெற்ற கூடலூர் சிஹாப் தங்ஙள் மனிதநேய மையத்தின் செவிலியர் சபீனா இ.யூ. முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை காயிதே மில்லத் மன்ஸிலுக்கு வருகை தந்தார். அப்போது தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.