முக்கிய செய்தி

4.2.2023 அன்று கேரள மாநிலம் கண்ணனூர் சென்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்.எஸ்.எப்.செயலாளர் முஹம்மது அர்ஸத் ஆகியோருக்கு மறைந்த தலைவர் இ.அஹ்

4.2.2023 அன்று கேரள மாநிலம் கண்ணனூர் சென்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்.எஸ்.எப்.செயலாளர் முஹம்மது அர்ஸத் ஆகியோருக்கு மறைந்த தலைவர் இ.அஹ்
4.2.2023 அன்று கேரள மாநிலம் கண்ணனூர் சென்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்.எஸ்.எப்.செயலாளர் முஹம்மது அர்ஸத் ஆகியோருக்கு மறைந்த தலைவர் இ.அஹ்மது சாகிப் இல்லம் மற்றும் கண்ணனூர் மாவட்ட முஸ்லிம் லீக் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அப்துல் கரீம் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

தொடர்ந்து கண்ணனூரில் மஹான் செய்யிது முஹம்மது புகாரி தங்கள் ஜியாரத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறைந்த தலைவர் இ.அஹ்மது சாகிப் நினைவிடம் அமைத்துள்ள கண்ணனூர் ஜாமிஆ மஸ்ஜித் அடக்கத்தலத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்.எஸ்.எப்.செயலாளர் முஹம்மது அர்ஸத், கண்ணனூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்   அப்துல் கரீம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஜியாரத் செய்து,மறு உலக நல்வாழ்விற்கு பிரார்த்தித்தனர்.
அன்று மாலை தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பசீர் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 09,10.03.2023 ஆகிய தினங்களில் சென்னையில் நடைபெறவுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் 75வது ஆண்டு பவள விழா-அகில இந்திய மாநாடு குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றனர்.