முக்கிய செய்தி

சேது சமுத்திர திட்டம் 150 ஆண்டு கால கனவு திட்டம் - மீண்டும் புது நம்பிக்கை பெற்றிருக்கிறது.

சேது சமுத்திர திட்டம் 150 ஆண்டு கால கனவு திட்டம் - மீண்டும் புது நம்பிக்கை பெற்றிருக்கிறது.
சேது சமுத்திர திட்டம்
150 ஆண்டு கால கனவு திட்டம் - மீண்டும் புது நம்பிக்கை பெற்றிருக்கிறது.
--
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் இத்திட்டம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாது தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும்.

பின் தங்கிய மாவட்டம் என்ற அடைமொழியோடு தொடர்ந்து வரும் எங்களுடைய இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு பெரும் ஏற்றம் கிடைத்து முன்னேறிய மாவட்டமாக உயர்த்திட முடியும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் துவங்கி, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து, தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களால் வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தினை செயல்படுத்திட தீர்மானமாக நிறைவேற்றி புது நம்பிக்கையை விதைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உளப்பூர்வமாக தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

150 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சிக்கான கனவை நினைவாக்கிட தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட இத்திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
---
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
மாநில துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.