முக்கிய செய்தி

இரண்டு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை தாயகம் அழைத்து வர வழிகாட்டிய சார்ஜா மண்டல மலப்புரம் ஜில்லா கே.எம்.சி.சி மற்றும் ஆல் இந்தியா கே.எம்.சி.சி

இரண்டு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை தாயகம் அழைத்து வர வழிகாட்டிய சார்ஜா  மண்டல மலப்புரம் ஜில்லா கே.எம்.சி.சி மற்றும் ஆல் இந்தியா கே.எம்.சி.சி
இரண்டு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை தாயகம் அழைத்து வர வழிகாட்டிய சார்ஜா  மண்டல மலப்புரம் ஜில்லா கே.எம்.சி.சி மற்றும் ஆல் இந்தியா கே.எம்.சி.சி

தஞ்சை மாவட்டம் , வழுத்தூரை சேர்ந்த அக்பர் என்பர் இரண்டு மாத காலமாக சார்ஜாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் இவரை  தாயகம் அனுப்புவதற்கு உண்டான வழிகாட்டுதலை சார்ஜா கே.எம்.சி.சி மலப்புரம் ஜில்லா  செயலாளர் சகோ ஹக்கீம் குருவாடி  அவர்களும் , சார்ஜா இந்தியன் அசோசியேசன் பொது செயலாளரும் கே.எம்.சி.சி நிர்வாகியுமான T.A.அப்துல் நஸீர் அவர்களும் இந்திய துணைத்தூதரகத்தன் உதவி கொண்டு  துரிதமாக வழங்கினர், மேலும் சென்னையிலிருந்து தேவைப்படும் உதவிகளுக்கு  என் அன்பு சகோதரர் முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய துணைத்தலைவர் புளியங்குடி ஆமீன் அவர்களை தொடர்பு கொண்டு தேவைகளை சொன்ன போது உடனடியாக அனைத்து தேவைகளையும் AIKMCC தலைவர் சகோதரர் சம்சுதீன் அவர்களின் அரவணைப்பில்  செய்து கொடுத்தார்,

 நள்ளிரவு முதல்  ஆம்புலன்ஸ்  ஒருங்கிணைப்பு முதல் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை உடனிருந்து ஏற்பாடு செய்த புளியங்குடி அப்துல் அஜீஸ் மற்றும் சென்னை AIKMCC சென்னை மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம்  மற்றும் கிரசன்ட் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும், மேலும் இறைவனின் கிருபையால் தாயகம் வர உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்  மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மக்கி பைசல்
சார்ஜா மண்டல இணை செயலாளர்
அமீர காயிதே மில்லத் பேரவை