முக்கிய செய்தி

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சந்தித்தனர்.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்,  தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சந்தித்தனர்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்,  தலைமையில் கேரளா மாநில தலைவர் சாதிக் அலி ஷிகாப் தங்கள், தேசிய பொதுச் செயலாளரும், கேரளா சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான பி.கே. குஞ்சாலிகுட்டி, பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. பஷீர், அப்துல் வஹாப், அப்துல் சமது சமதாணி, கே. நவாஸ் கனி, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் எஸ்.அன்சாரி மதார் ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் சந்தித்தனர்.

பின்னர் பேராசியர் கே.எம். காதர்மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவளவிழா மார்ச் 10 -ம் தேதி  இந்திய முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் தொடக்கவிழா நடத்தவுள்ளோம்.