முக்கிய செய்தி

​சிறப்புடன் நிறைவடைந்தது இந்த ஆண்டிற்கான உயர் கல்வி உதவி வழங்கும் விழா.

​சிறப்புடன் நிறைவடைந்தது இந்த ஆண்டிற்கான உயர் கல்வி உதவி வழங்கும் விழா.
சிறப்புடன் நிறைவடைந்தது இந்த ஆண்டிற்கான உயர் கல்வி உதவி வழங்கும் விழா.
---
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு வருடம் தோறும்  உயர்கல்வி உதவி வழங்கி வருகிறோம். 
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 2000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் 720 மாணவர்களுக்கு திட்டமிடப்பட்டு அந்த விழா (17/12/22)  அன்று மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.
மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகளில் 720 மாணவர்கள் உயர்கல்வி உதவியினை பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருள் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி Anbil Mahesh Poyyamozhi, மாண்புமிகு சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி கே எஸ் மஸ்தான் Gingee Masthan,  இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான திரு காதர்பாட்சா முத்துராமலிங்கம், திமுக மாணவர் அணி மாநில தலைவர் திரு ராஜுவ் காந்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ எம் முஹம்மது அபூபக்கர்,திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு இன்ப ரகு,  பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு செ முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் எம் கருமாணிக்கம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைத்து கட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தொகுதி சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
--
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
மாநில துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.