முக்கிய செய்தி

நாடாளுமன்ற மக்களவையின் நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் அத்துமீறப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் நவாஸ்கனி எம்பி ஒத்திவைப்பு தீர்மானம்

நாடாளுமன்ற மக்களவையின் நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் அத்துமீறப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் நவாஸ்கனி எம்பி ஒத்திவைப்பு தீர்மானம்
நாடாளுமன்ற மக்களவையின் நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு

தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும்,

நாடாளுமன்றத்தில் நவாஸ்கனி MP ஒத்திவைப்பு தீர்மானம்.
--
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றனர்.

இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறனர்.

ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாமல் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் என வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறனர்.

 இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்களையும் நான்கு நாட்டு படகுகளையும் கடந்த ஜூன் 30 அன்று இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

இப்படி தொடர்ந்து கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வை உடனடியாக காண விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதுகுறித்து உடனடியாக மக்களவையின் நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரியுள்ளேன்.
--
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.